ETV Bharat / state

அண்ணா மீது கை வைத்தால் அவ்வளவுதான்- ஏடிஎஸ்பியை மிரட்டிய திமுக பிரமுகர்

author img

By

Published : Oct 7, 2022, 11:24 AM IST

விழுப்புரம் ஏடிஎஸ்பியை கண்டமங்கலம் ஊராட்சி திமுக தலைவர் மிரட்டியது தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

அண்ணா மீது கை வைத்தால் அவ்வளவுதான்- ஏடிஎஸ்பியை மிரட்டிய திமுக பிரமுகர்
அண்ணா மீது கை வைத்தால் அவ்வளவுதான்- ஏடிஎஸ்பியை மிரட்டிய திமுக பிரமுகர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு தொடர்பாக மூன்று பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்நிகழ்வுக்கு முக்கிய காரணமான கண்டமங்கலம் பாஜக ஒன்றிய தலைவர் பிரகலாதனை கைது செய்யவில்லை எனக்கூறி கண்டமங்கலம் ஊராட்சி திமுக ஒன்றிய தலைவர் வாசன் வளவனூர் காவல் துறை ஏடிஎஸ்பி கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அண்ணா மீது கை வைத்தால் அவ்வளவுதான்- ஏடிஎஸ்பியை மிரட்டிய திமுக பிரமுகர்

காவல்துறையின் நடவடிக்கை சர்வாதிகாரி அதிகாரம் போன்று உள்ளது. நாங்கள் ஆளும் கட்சி என்பதால் அமைதியாக போகிறோம். எங்கள் தளபதி சொன்னார் என்றே இன்றுவரை அமைதி காத்தோம்.

ஆனால் அண்ணாவின் மீது கை வைத்தால் அவ்வளவு தான் என்று மிரட்டும் தோனியில் வளவனுார் காவல் நிலைய ஏ டி எஸ் பி யின் முன் மேஜை மீது அடித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார் வாசன்.

இதையும் படிங்க:போகாத ஊருக்கு வழி சொல்கிறார் வேளாண்மைத்துறை அமைச்சர் - ஆர்பி உதயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.